யாழ்ப்பாணம்
-
Featured
இன்னும் திறக்கப்படாத முப்பத்தொரு வருட சிறை வாழ்க்கை | ஜெரா
கட்டுரை | படங்கள் | ஜெரா முன்குறிப்பு: 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்கள், கடந்த 31 வருடங்களாகத் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான இவரை மீட்பதற்காக அவர்தம் குடும்பத்தார் நடத்தும் கண்ணீர் ததும்பும் போராட்டம் பற்றிய கட்டுரை இது. யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமான நல்லூர் கந்தசாமி கோயிலின் மணியோசை கேட்கும் தொலைவில் உள்ள இடத்தில்தான்…
Read More » -
Featured
நீதிக்காகக் காத்திருக்கும் கொலை
கட்டுரை | பார்தீபன் சண்முகநாதன் | படங்கள் | த.பிரதீபன் “நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை…
Read More » -
Featured
கடலை அழிக்கிறதா கரைவலை?
கட்டுரை மற்றும் படங்கள் | ஜெரா, பிபிசி அறிமுகக் குறிப்பு “கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும்…
Read More » -
சுற்றுலா
தமிழர் மரபுரிமை சுற்றுலா
கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால…
Read More » -
Featured
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில்…
Read More »