Featured
-
சனநாயகத்தின் பெயரால் ஒரு சதி: மலையகமும் PSTA சட்டமும்
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Daily Mirror ஒரு கறுப்புச் சட்டத்தின் மறுவடிவம் இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றில் ‘தேசிய பாதுகாப்பு’ என்பது ஆட்சியாளர்களினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயச் சொல்லாகவே இருந்து வருகின்றது. 1979 ஆம் ஆண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (Prevention of Terrorism Act – PTA), கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் வாழ்வியலையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்த ஒரு கறுப்புச் சட்டமாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச…
Read More » -
எல்லோர் வயிற்றிலும் அடிக்கப்போகும் யுத்தத்தின் பசி
கட்டுரை | Amalraj Francis | படங்கள் Aljazeera, CNBC ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தம் ஒரு வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரிற்குப் பின்னர், அதன் அத்தனை சாயல்களோடும், உலகின் பேரமைதியை மிரள வைத்துக்கொண்டிருக்கும் போர் இது. கிட்டத்தட்ட 337 பில்லியன் டொலர்களை முதலாம் உலகப்போரும், 1’300 பில்லியன் டொலர்களை இரண்டாம் உலகப் போரும் தின்று தீர்த்துப் பெரும் அழிவுகளிற்கு வித்திட்ட பின்னர், பல பில்லியன்களைக் கொட்டித் தாரைவார்த்து நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தப் போர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர், சுமாராக ஒரு நாளைக்கு…
Read More » -
நீதிக்காகக் காத்திருக்கும் கொலை
கட்டுரை | பார்தீபன் சண்முகநாதன் | படங்கள் | த.பிரதீபன் “நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை…
Read More » -
கடலை அழிக்கிறதா கரைவலை?
கட்டுரை மற்றும் படங்கள் | ஜெரா, பிபிசி அறிமுகக் குறிப்பு “கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும்…
Read More » -
இலங்கை இறப்பர்: காலநிலைப் போர்
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Ada Derana அறிமுகம் இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் தேயிலைக்கு அடுத்தபடியாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கிய பயிராக இறப்பர் விளங்குகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பயிர், இன்று இலங்கையின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுதோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சவாலான காலநிலை மாற்றம் (Climate Change), இலங்கையின் இறப்பர் கைத்தொழிலை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. புவி வெப்பமடைதல், மழையற்ற காலங்களின்…
Read More » -
இயற்கையுடன் ஓர் உடன்படிக்கை
கட்டுரை | அருள் கார்க்கி | படம் | Anas Mohamed Nuski ஒரு தீவு தேசத்தின் காலநிலைச் சவால்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான அச்சாணியாக விளங்கும் தேயிலைத் துறை, இன்று புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் இலங்கை தேயிலை (Ceylon Tea) வர்த்தகம், இன்று 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கையும் தீர்மானிக்கிறது. எனினும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அதீத வெப்பநிலை,…
Read More » -
அநீதிக்குப் பிரபலமான நாடு
கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப்…
Read More » -
இடப்பெயர்வா நிலமிழப்பா?
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | North East Narrative இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முதுகெலும்பாகத் திகழ்ந்த போதிலும், இன்று காலநிலை மாற்றத்தின் பெயரால் ஒரு புதிய ‘அரசியல் இடப்பெயர்வை’ (Political Displacement) எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. 2025 நவம்பரில் தாக்கிய டிட்வா (Ditwah) சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளைக் காரணியாகக் கொண்டு, மலையக மக்களை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி மீள்குடியேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றன.…
Read More » -
அபகரிக்கப்பட்ட நிலம்
நேர்காணல் | North East Narrative | படம் | Selvarajah Rajasekar செல்வராஜா ராஜசேகர் என அறியப்படுகின்ற சுயாதீனப் பத்திரிகையாளர், ‘மாற்றம்’ இணையதளத்தின் பிரதம ஆசிரியராவார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தயாரிப்பில் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறும் நிலஅபகரிப்பு, அதனூடாக மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் குறித்து, ”குச்சவெளி” என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் குறித்து North East Narrative இணையதளத்திற்கு அவரளித்த நேர்காணல் இங்கே பிரசுரமாகிறது. குச்சவெளி ஆவணப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? குச்சவெளி நில அபகரிப்பு பிரச்சினைகள் நாளாந்தம் பத்திரிகைகளிலும்,…
Read More » -
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில்…
Read More »