Featured
-
இடப்பெயர்வா நிலமிழப்பா?
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | North East Narrative இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முதுகெலும்பாகத் திகழ்ந்த போதிலும், இன்று காலநிலை மாற்றத்தின் பெயரால் ஒரு புதிய ‘அரசியல் இடப்பெயர்வை’ (Political Displacement) எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. 2025 நவம்பரில் தாக்கிய டிட்வா (Ditwah) சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளைக் காரணியாகக் கொண்டு, மலையக மக்களை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி மீள்குடியேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றன.…
Read More » -
அபகரிக்கப்பட்ட நிலம்
நேர்காணல் | North East Narrative | படம் | Selvarajah Rajasekar செல்வராஜா ராஜசேகர் என அறியப்படுகின்ற சுயாதீனப் பத்திரிகையாளர், ‘மாற்றம்’ இணையதளத்தின் பிரதம ஆசிரியராவார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தயாரிப்பில் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறும் நிலஅபகரிப்பு, அதனூடாக மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் குறித்து, ”குச்சவெளி” என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் குறித்து North East Narrative இணையதளத்திற்கு அவரளித்த நேர்காணல் இங்கே பிரசுரமாகிறது. குச்சவெளி ஆவணப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? குச்சவெளி நில அபகரிப்பு பிரச்சினைகள் நாளாந்தம் பத்திரிகைகளிலும்,…
Read More » -
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில்…
Read More »